குறுகிய காலத்தில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் இராஜினாமா!

Date:

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி ககல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், எந்தவொரு தரப்பினரையும் வருத்தப்படுத்தும் நிலை உருவானாலோ, சமூகத்தில் பிளவு ஏற்படுத்தினாலோ, அல்லது சங்கத்தின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, வேந்தர் பதவியை விட சங்கத்தின் ஒற்றுமையே முக்கியமானதாக கருதுவேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருந்ததுடன், குறுகிய காலத்திற்குள் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் பல்வேறு தரப்பினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளதோடு, அவர் எடுத்துள்ள இந்த முடிவுக்கு எதிர்வினைகளும் உருவாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால்...

ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்...

இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்!

சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்