29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
இந்தியா

பிளாஸ்டிக் கவரை தாய் உண்ண, மகன் கும்பமேளாவில்

வயதான தாயை பூட்டிவிட்டு கும்பமேளாவிற்கு மகன் சென்றதனால் குறித்த தாய் பசியில் பிளாஸ்டிக் கவரை உண்ட அவலச் சம்பவம் பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக, தனது வயதான தாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகன் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகா சிவராத்திரி நாளான வருகிற 26ம் திகதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில், உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதன் பாதுகாப்பிற்காக 45,000க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் தேசிய மீட்பு படையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 68 வயதான தாயை, வீட்டிற்குள் பூட்டிவிட்டு மகன் தனது குடும்பத்துடன் கும்பமேளா சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இரண்டுநாட்களாக பசியால் வாடிய மூதாட்டி, பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முயன்ற நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார்..

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment