கிழக்கு மாகாண ஆளுநரால் தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஊடக அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறை அறிவிப்பு தமிழ் பாடசாலைகளுக்கு மட்டும் பொருந்துவதாகவும், அதற்கான பதில் பாடசாலைகள் 01.03.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1