சாவகச்சேரியில் தாக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Date:

சாவகச்சேரியில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் வீதியில் சென்றவர் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. மதுபோதையிலிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (19) இரவு அவர் உயிரிழந்தார். தாக்குதல் காரணமாக உயிரிழந்தாரா அல்லது பிற காரணமா என்பது பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிய வரும்.

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்