சாவகச்சேரியில் தாக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Date:

சாவகச்சேரியில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் வீதியில் சென்றவர் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. மதுபோதையிலிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (19) இரவு அவர் உயிரிழந்தார். தாக்குதல் காரணமாக உயிரிழந்தாரா அல்லது பிற காரணமா என்பது பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிய வரும்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்