ரயில் மோதி முதியவர் பலி

Date:

ரயிலில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயில், தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் சென்றுக்கொண்டிருந்த போது, ரயில் மோதி சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில், மோதி பலத்த காயமடைந்த அந்த நபர், உடனடியாக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

எனினும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் முழு விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்த மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...

தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதி செய்த சர்வதேச நீதிமன்றம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, தனது "போதைப்பொருள் மீதான போர்"...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்