பொலிவியாவில் பயங்கர விபத்து – 30 பேர் உயிரிழப்பு!

Date:

பொலிவியாவின் யோகல்லா நகரின் தென்மேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

பள்ளத்தாக்கு வழியாக பயணம் செய்துகொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து சுமார் 800 மீற்றர் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் 30 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த விபத்திற்கு, குறித்த மலையோரப் பாதையின் அதிக திருப்பங்கள் மற்றும் பேருந்தின் அதிக வேகம் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்ததாக தகவல்

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில்...

இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர்...

அந்தோனியார் ஆலயத்தில் முன்னாள் கல்விப்பணிப்பாளரின் சடலம்!

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்