நிரந்தர நியமனம் கோரும் திருகோணமலை சுகாதாரத் தொண்டர்கள்

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=i5VUH4TnJuA[/embedyt]

திருகோணமலை மாவட்டத்தில் 2000ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு காலப்பகுதிகளில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்கள், தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர். இதற்காக, அவர்கள் நேற்று (17) கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்திக்க முயன்றனர்.

ஆளுநர் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், அவர்கள் தங்களது நிலையை விளக்கி கருத்துத் தெரிவித்தனர். தாங்கள் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடுமையான சேவைகளை வழங்கி வந்தும், இதுவரை நிரந்தர நியமனம் பெறாததைக் கடும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டனர்.

நிரந்தர நியமனத்திற்காக மேற்கொள்ளப்படும் நேர்முகத் தேர்வுகளில் பலமுறை தோற்றிய போதிலும், தங்களது நியமனம் வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்