கடிதம் கசிந்தது எவ்வாறு?: பொலிசாரை கிடுக்குப்பிடி பிடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!

Date:

குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் அனுப்பிய கடிதம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்தது என்பது குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் வாகன சாரதியை கடத்தி, ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விடுவிக்கக் கோரி இந்தக் கடிதம் வெளியிடப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இந்தக் கடிதம் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் ஏற்கனவே பதில் ஐஜிபிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இன்று (17 ஆம் திகதி) கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான உத்தரவை சட்டமா அதிபர் பின்னர் மாற்றினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்