இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

Date:

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BUNG TOMO – 357’ என்ற போர்க்கப்பல், சிநேகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையினரால், கடற்படை மரபுகளுக்கு ஏற்ப குறித்த போர்க்கப்பலை வரவேற்கப்பட்டுள்ளதாக Multirole Light Frigate வகையைச் சேர்ந்த ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமுடையது மற்றும் மொத்தம் 111 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகிறார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்தோனேசிய கடற்படை வீரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்புறவுக் விஜயத்திற்குப் பின்னர், ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பல் இன்று இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்