“லிட்டில் ஹார்ட்ஸ்” இணைய பணமோசடியில் இருவர் கைது

Date:

இணையத்தின் மூலம் “லிட்டில் ஹார்ட்ஸ்” என்ற போலிக் கணக்கை உருவாக்கி பணம் தருவதாகவும், “ஹார்மிண்டேஷன்” கணக்கின் மூலம் பணப்பரிசு வழங்குவதாகவும் கூறி, 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மோசடி கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறைப் பகுதியிலும், நரோவ்வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நொச்சிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சேனாதிரகே துலான் மஹேஷித மற்றும் பலவியா பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணிக்குகே சந்தருவன் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சேனாதிரகே துலான் மஹேஷித சமூக ஊடக ஆர்வலர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய ஊடுருவல் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்