காலாவதியான தீயணைப்புக்கருவியால் வைத்தியசாலையில் பதற்றம்

Date:

வைத்தியசாலையில் காலாவதியான தீயணைப்பு கருவிகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) தீயினால் ஏற்பட்ட அவசர நிலையை கட்டுப்படுத்த முயன்றபோது, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் இயங்காமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அவசர நேரத்தில் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்திய வேளை அவை செயல்படாத காரணத்தால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர், நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அருகிலமைக்கப்பட்ட புதிய விசேட பெண்கள் வைத்தியசாலை கட்டிடத்தில் பொருத்தப்பட்ட தீயணைப்பு கருவிகளை கொண்டு, தீயினை கட்டுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தருணத்தில், பொது மக்கள் அதிகரித்த அதிருப்தி குறித்து தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் தீயணைப்பு கருவிகள் காலாவதியாகி, பல ஆண்டுகள் கடந்தபோதும் அவை மாற்றப்படாத நிலை அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாக மக்களும் கூறுகிறார்கள்.

மேலும், புதிய கட்டிடத்தில் தீயணைப்பு கருவிகள் இல்லாவிடில், தீ விபத்து பெரிதாக பரவியிருக்கலாம் என்றும் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர்.

வைத்தியசாலைகளில் தீயணைப்பு கருவிகள் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான ஓர் விடயமாகும். எனினும், காலாவதியான கருவிகள் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருப்பது கூடிய வருத்தத்தையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்