வருடாந்தம் புற்றுநோயால் 1200 சிறுவர்கள் பாதிப்பு – 250 பேர் பலி

Date:

புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1200 சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய், மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குழந்தைகளில் ஆண்டுக்கு சுமார் 250 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறுவர் புற்றுநோயை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள், அதிக புத்திசாலித்தனமான பரிசோதனை முறைகள், மற்றும் முன்னேற்றமான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

அத்துடன், விவசாயத்தில் அதிகரித்து வரும் இரசாயனப் பயன்பாடு, தூய்மையற்ற உணவு பழக்கவழக்கங்கள், மற்றும் பரம்பரை காரணிகள் ஆகியவை புற்றுநோயை தூண்டக்கூடிய முக்கிய காரணிகளாக இருக்கலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்