பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகளை ஆற்றில் விட்ட பிரேசில்

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=os8vo78BeO8[/embedyt]

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில், அருகிவரும் உயிரினமாக உள்ள டிராஜாகாஸ் (Yellow-Spotted River Turtles) ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியாக, பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் இயற்கை சூழலில் விடப்பட்டுள்ளன.

இவ்வகை ஆமைகள் பெரும்பாலும் ஆறுகளின் கரைகளிலும், காடுகளின் நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. அவை கடற்கரையில் அல்லது ஆற்றங்கரையில் முட்டையிடும் போது, பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த உயிரினத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தடுக்கும்முகமாக, பிரேசிலின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இகாபோ ஆசு ஆற்றங்கரையில் 5,000 டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகளால் அவை ஆற்றில் விட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. பொருத்தமான சூழலில் இந்த ஆமைகள் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ள இந்த நடவடிக்கை, இந்த ஆமைகளின் இன அழிவை தவிர்க்க ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்