வவுனியாவில் சந்தேகத்துக்கிடமான சடலம்!

Date:

கடைத்தொகுதி ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் குறித்த சடலம் இன்று (11-02-2025) காலை மீட்கப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, பசார் வீதியில் இயங்கும் ஒரு நகை பட்டறையில் வேலை செய்துவரும் 40 வயதான சுப்பையா ஆனந்தன் என்பவர், நேற்றிரவு தொழிலின் பொருட்டு வீட்டிலிருந்து கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால், இன்று காலை பட்டறை அமைந்துள்ள மாடிக்கட்டடத்தின் கீழ்தளத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததாக சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்