காதலர் தினம் அன்று விசேட பாராளுமன்ற அமர்வு

Date:

எதிர்வரும் 14 ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு ஒன்றினை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு இன்றைய தினம் (10) தீர்மானம் மேற்க்கொண்டுள்ளது. இந்த முடிவை பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவித்தார்.

இந்த அமர்வில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மசோதா தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் முடிவை அறிவிக்க உள்ளனர்.

இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலியின் தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி, பிரதமர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த விசேட கூட்டத்திற்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மசோதாவை பரிசீலிக்க, பெப்ரவரி 14 ஆம் திகதி தொடர்புடைய அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்