எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி – தலைமன்னார் அருகே 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.