மின் கம்பம் முறிந்து விழும் அபாயத்தில் செம்பியன்பற்று மக்கள்

Date:

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில், மாமுனை பிரதான வீதியில் மூன்று வீதிகள் இணைக்கும் பகுதியிலுள்ள மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மின் கம்பம் கடந்த பல மாதங்களாக விழும் அபாயத்தில் உள்ளதென குறிப்பிட்டுள்ள பகுதி மக்கள், இதற்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தபோதும், கிராம உத்தியோகத்தர் மின்சார சபைக்கு அறிவிப்பதாக கூறி, புகைப்படம் எடுத்து சென்று இரண்டு கிழமைகள் கடந்து இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதியில் உள்ள மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

மேலும், இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் அப்பகுதியில் பல சொத்துகளும் உயிர் சேதங்களும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கிராம மக்களின் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்