இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எச்சரிக்கை

Date:

நாட்டின் பல பகுதிகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி மோசடிகள் இடம்பெற்று வருகின்றன என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தற்பொழுது செயற்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்து, நாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி ஒன்று நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த எச்சரிக்கையில், E-8 வேலைப் பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்கும் எந்தவொரு தனியார் நிறுவனம், தனிநபர் அல்லது குழுவுக்கும் இதுவரை எந்தவொரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால், எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது குழுக்கள் சட்டப்பூர்வமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மோசடி செய்தி பரவுவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதாகக் கூறி பணம் வசூலிக்கும் நபர்களிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்