மின் கம்பம் முறிந்து விழும் அபாயத்தில் செம்பியன்பற்று மக்கள்

Date:

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில், மாமுனை பிரதான வீதியில் மூன்று வீதிகள் இணைக்கும் பகுதியிலுள்ள மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மின் கம்பம் கடந்த பல மாதங்களாக விழும் அபாயத்தில் உள்ளதென குறிப்பிட்டுள்ள பகுதி மக்கள், இதற்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தபோதும், கிராம உத்தியோகத்தர் மின்சார சபைக்கு அறிவிப்பதாக கூறி, புகைப்படம் எடுத்து சென்று இரண்டு கிழமைகள் கடந்து இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதியில் உள்ள மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

மேலும், இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் அப்பகுதியில் பல சொத்துகளும் உயிர் சேதங்களும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கிராம மக்களின் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்