பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (7) பதிவாகியுள்ளது.
வவுனியா, பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக நீர் இறைக்கும் மோட்டாரின் மீது விழுந்துள்ளார். இதன்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியின் மூலம் மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



