பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc-Andre Franche) இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று முன்தினம் (பெப்ரவரி 4ம் திகதி) அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Clean Sri Lanka திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை அவர் பாராட்டியதோடு, நாட்டின் வளர்ச்சியையும் சமூக சீர்திருத்தங்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்



