திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிறப்பில் ஆணாக இருந்துவிட்டு, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைத் தடுக்க இந்த புதிய நிர்வாக உத்தரவு இன்று (05) கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவருக்கான பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார், அதில் ஒன்று ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களைக் கோரிய அதிகாரப்பூர்வமான உத்தரவு என குறிப்பிடத்தக்கது.



