கயிறு கட்டிய நிலையில் முதியவரின் சடலம் ஒன்று குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்.வடமராட்கி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் இன்று (02) அதிகாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர், வேதனை தாங்க முடியாமல் தனது உயிரை இவ்வாறு மாய்த்துக் கொண்டதாக தெரியவருகின்றது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




