வடக்கில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் இனி பயணச்சிட்டை கட்டாயம்!

Date:

வடக்கு மாகாணத்தில் 01.02.2025 முதல், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்படவேண்டும். அதேபோன்று உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 01.03.2025 ஆம் திகதிக்கு முன்னர் பயணச்சிட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதக உத்தியோகத்தர்கள் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தாங்கள் செலுத்தும் கட்டணங்களின் மீதிப்பணம் தரப்படுவதில்லை எனவும், கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாகவும் முறைப்பாடுகள் முன்வைத்தமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்