ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

Date:

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லபத பகுதியில் 5750 மில்லிகிராம் ஹெரோயினும், 11320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து, காலி பொலிஸார் அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையை முன்னெடுத்த நீதவான், இருவரையும் நாளை (31) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில், காலி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இருவரையும் கைகளில் விலங்கிட்டு தனியார் முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது, சந்தேக நபர்கள் புத்திக்கூர்மையுடன் செயலில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர், மற்றவரின் கைவிலங்குகளை கழற்றி, இருவரும் ஒன்றாக முச்சக்கர வண்டியில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்குப் பின்னர், குறித்த இருவரையும் தேடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்