26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் விசேட தேவையுடையவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும், வெருகல், கோமரன்கடவல மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய போட்டியாளர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களின் இயலுமைக்கு ஏற்ப அனைத்து போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று, வெற்றியை நோக்கி போட்டியிட்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேலதிக அரசாங்க அதிபர் சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார். மேலும், இந்நிகழ்வில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் மின்சாரத் தடை – கடும் அவதியில் மக்கள்

east tamil

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

Leave a Comment