மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு

Date:

தற்போது கிடைக்கப்பட்டுள்ள தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 14ம் திகதி தொடங்கி, 45 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (29) அமௌனி அமாவாசையை முன்னிட்டு மட்டும் 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் அதிகாலை 3 மணியளவில் திரண்ட பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பக்தர்களை நீராட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்