வவுணதீவு, தொடுவானம் கலாமன்ற இளைஞர்-யுவதிகள் முன்னெடுப்பில், Child Fund நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் AU Lanka செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீதி நாடகம் நடத்தப்பட்டது.
கடந்த 26.01.2025 கிரான் பொதுச்சந்தை மற்றும் கும்புறுமூலை கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறுவர்களை பாதிக்கும் இளவயது திருமணம், பாடசாலை இடைவிலகல், குழந்தை தொழிலாளர்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தி, மக்களுக்கு தெளிவூட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சமூக மட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களை குறைத்து, அவர்களுக்கு உகந்த التعுவளவை உருவாக்கி கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டே இந்த விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.





