27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இந்தியா

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு

தற்போது கிடைக்கப்பட்டுள்ள தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 14ம் திகதி தொடங்கி, 45 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (29) அமௌனி அமாவாசையை முன்னிட்டு மட்டும் 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் அதிகாலை 3 மணியளவில் திரண்ட பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பக்தர்களை நீராட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

இந்திய பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

east tamil

Leave a Comment