நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

Date:

புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று (25.01.2024) வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த முக்கிய நிகழ்வு இளங்கலைஞர் மன்றத்தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாவின் முன்பாக, இளங்கலைஞர் மன்றத்திற்கு அருகிலுள்ள கொண்டலடி ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், புதிய கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் கௌரவ விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இசைவானர் மு.கண்ணன் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் நடைபெற்றது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்