எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே கடற்படை கப்பலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மேற்கண்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளில் சென்றிருந்த 18 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர்.
இந் நிலையில், இன்று (26) அதிகாலை மேலும் ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 15 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையால் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 33 பேர் சிறைபிடித்துச் செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.



