இலங்கையில் சமஷ்டி ஆட்சி அமைக்கப்படுமாயின் நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
சூரியன் வானொலியில் ஒளிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வாறு இலங்கையில் சமஷ்டி ஆட்சி அமைக்கப்படுவதால், இலங்கை சர்வதேச ரீதியில் வலிமையான நாடாக மாற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.




