25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு வீதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும், ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புஸ்பராசா பகீரதன் மற்றும் பகீரதன் ரியானா ஆகியோரே உயிரிழந்தனர். பகீரதன்  யாழ்ப்பாணம், நீர்வேலியை பூர்வீகமாக கொண்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

Leave a Comment