திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP

Date:

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, முஹம்மது சுல்தான் நஜீம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, கிண்ணியாவிலிருந்து உருவான முதல் ASP அதிகாரியாகவும், திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP அதிகாரியாகவும் சாதனை படைத்துள்ளார்.

பொலிஸ் துறையில் சிறப்பான நிர்வாகத் திறனை வெளிப்படுத்திய இவர், சிங்களமும் தமிழும் சிறப்பாக பேசும் பன்மொழிப் புலமைமிக்க அதிகாரியாக விளங்குகிறார். மேலும், அவரின் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதுடன், மனிதநேயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அதிகாரியாக மக்கள் மத்தியில் பெருமை பெற்றுவருகின்றார்.

முஹம்மது சுல்தான் நஜீம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமை துறையில் பட்டப்பின் டிப்ளோமாவை (Executive Diploma in Human Rights) வெற்றிகரமாக முடித்துள்ள இவர், தனது அறிவியல் மற்றும் தொழில்முறை தேர்ச்சிகளுக்காக Crime Scene Management, Environmental Law, Public Order Management, Miscellaneous Complaint Handling முதலான சான்றிதழ் பாடநெறிகளையும் நிறைவு செய்துள்ளார்.

பொலிஸ் துறையில் அவரது தனித்துவத்தை நிலைநாட்டும் இளம் அதிகாரியான முஹம்மது சுல்தான் நஜீம் அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்ததாக தகவல்

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில்...

இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர்...

அந்தோனியார் ஆலயத்தில் முன்னாள் கல்விப்பணிப்பாளரின் சடலம்!

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்