27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, முஹம்மது சுல்தான் நஜீம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, கிண்ணியாவிலிருந்து உருவான முதல் ASP அதிகாரியாகவும், திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP அதிகாரியாகவும் சாதனை படைத்துள்ளார்.

பொலிஸ் துறையில் சிறப்பான நிர்வாகத் திறனை வெளிப்படுத்திய இவர், சிங்களமும் தமிழும் சிறப்பாக பேசும் பன்மொழிப் புலமைமிக்க அதிகாரியாக விளங்குகிறார். மேலும், அவரின் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதுடன், மனிதநேயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அதிகாரியாக மக்கள் மத்தியில் பெருமை பெற்றுவருகின்றார்.

முஹம்மது சுல்தான் நஜீம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமை துறையில் பட்டப்பின் டிப்ளோமாவை (Executive Diploma in Human Rights) வெற்றிகரமாக முடித்துள்ள இவர், தனது அறிவியல் மற்றும் தொழில்முறை தேர்ச்சிகளுக்காக Crime Scene Management, Environmental Law, Public Order Management, Miscellaneous Complaint Handling முதலான சான்றிதழ் பாடநெறிகளையும் நிறைவு செய்துள்ளார்.

பொலிஸ் துறையில் அவரது தனித்துவத்தை நிலைநாட்டும் இளம் அதிகாரியான முஹம்மது சுல்தான் நஜீம் அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment