மட்டக்களப்பில் வெள்ளம்: 10,031 பேர் தஞ்சம், 3737 குடும்பங்கள் பாதிப்பு

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடித்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் வெள்ள அனர்த்தத்தால் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 10,031 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பல ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

கனமழையால் பெரும் குளங்கள், உன்னிச்சை குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதையடுத்து, அவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வெள்ளாவெளி – மண்டூர்,  இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றும் உதவிக் குழுக்கள் மூலம் சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

வெள்ளம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பல குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. நீடித்த மழையால் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் உடனடி உதவிகளை எதிர்பார்த்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்