27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தினம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களின் தலைமையில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விரைவுபடுத்தும் நோக்கில் இன்று (21) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மக்கள் தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பல பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு தங்கள் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட இந்த நிகழ்வில், ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளரிடமும் நேரடியாகப் பேசி பிரச்சனைகளை முன்வைக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் மக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உடனடியாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment