26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இந்தியா

தாயின் கோரிக்கைக்கு சோக முடிவு – 5ம் வகுப்பு மாணவி தற்கொலை

இந்தியாவின் ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் 5ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் – மஞ்சுளா தம்பதியரின் இளைய மகளாகிய அக்‌ஷயா, வீட்டில் உள்ள சிறிய வேலைகளை செய்யும்படி தாய் கூறியதைத்தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நேற்று (19) காலை தாய் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, சமையலறையில் அக்‌ஷயா துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியுடன் சத்தமெழுப்பினார்.

இச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவ்விடத்திற்கு வந்திருந்ததையடுத்து, அவர்களின் உதவியுடன் உடனடியாக அக்‌ஷயாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெற்றோரின் கவனமும், குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ளும் பொறுப்பும் மிக அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!