2025ம் ஆண்டின் முதல் 20 நாட்களில் இலங்கையில் 8 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றனர் என்று பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1