28.8 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

1ம் தர மாணவர் சேர்க்கை – இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

1ம் தர மாணவர் சேர்க்கைக்கு பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையை இலஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் இன்று (20) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் படி, குறித்த அதிபர் மாணவரை தரம் 1ல் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்து மூட்டைகளுக்கான 18,520 ரூபா தொகையை பாடசாலைக்கு முன்பாக அமைந்த வியாபாரியிடம் செலுத்துமாறு கூறியதாகத் தெரிகிறது.

முறைப்பாட்டாளர் பணத்தை செலுத்தியதையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணையை முன்னெடுத்ததன் மூலம் சம்பந்தப்பட்ட அதிபர் கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்னக்கோன் பற்றி தகவலறிந்தால் சிஐடிக்கு அறிவிக்கவும்!

Pagetamil

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தாயும், மகனும் பலி

Pagetamil

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!