சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

Date:

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று சேருநுவர-கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவில் இன்று (20) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்தாக சேருநுவர பொலிஸார் தெரிவிகின்றனர்.

விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்ததாகவும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சேருநுவர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்