ஜப்பான் தூதுவர் மற்றும் அவரது குழு இன்று (20) திருகோணமலையின் சம்பூர் பகுதியில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இதன் போது, சூரக்குடா பகுதியில் உள்ள முக்கிய குளத்தை பார்வையிட்டனர்.
இந்த குளம், அப்பகுதியில் உள்ள மக்களின் வேளாண்மை தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாகும். இதன் புனரமைப்பு தொடர்பான திட்டங்களை முன்னேற்றுவது குறித்து இவ்விஜயம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





