சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

Date:

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று சேருநுவர-கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவில் இன்று (20) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்தாக சேருநுவர பொலிஸார் தெரிவிகின்றனர்.

விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்ததாகவும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சேருநுவர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

‘உண்மையான போர் வீரர்களாக இருந்தால்…’: அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதி சவால்!

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் ஜனாதிபதி மசூத்...

243 பேருடன் மாயமான இந்தோனேசியா பயணிகள் கப்பல்

243 பேருடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்...

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்