வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

Date:

அண்மையில் பெய்த கனமழையினால் கலா ஓயா நிரம்பி வழிந்ததில், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்த பூங்காவிற்கு செல்ல முடியாது என வனவிலங்கு பிரிவு அறிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம், கலா ஓயா வழியாக சுமார் 6,000 கன அடி நீர் பாய்ந்ததன் காரணமாக, எளுவன்குளம்-கலா ஓயா பாலம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியதன் மூலம் அந்த பகுதி முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகிறது.

இதனால் பூங்காவிற்கு செல்லும் வழி பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான புது அறிவிப்பின்படி, எந்த விதமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பூங்காவிற்கு வர முடியாது என வனவிலங்கு பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்