Pagetamil
உலகம்

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குத் தடை

அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், டிக்டொக் செயலி நாளை (19) முதல் அமெரிக்காவில் தடை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டிக் டொக்’ என அறியப்படும் இந்த செயலி, சீனாவின் ‘பைட்டான்ஸ்’ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் உலகளவில் பிரபலமாகும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவின் பல மாநிலங்களில், அரசு தற்காலிகமாக டிக்டொக் பயன்பாட்டிற்கு தடை விதித்திருந்தது. தற்போது, இந்தத் தடை அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது, மேலும் வரும் வாரம் முதல், டிக்டொக் செயலி பயன்படுத்தும் அனைவரும் அதனைப் பயன்படுத்த முடியாது.

இந்த தடை எப்போது நீக்கப்படும் என்ற கேள்விக்கு, அமெரிக்கா தனது சட்டப்படி, டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிடாமல் இருந்தால், அது பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, பைட்டான்ஸ் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய மறுத்து, மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக, அமெரிக்க அரசாங்கம் ஜோ பைடன் தலைமையில் சட்டம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலை சிறிய முன்னேற்றம்

east tamil

சீனாவில் AI ரோபோ மக்களை தாக்கிய சம்பவம்

east tamil

கனடா பிரதமரை மீண்டும் கவர்னர் என குறிப்பிட்ட டிரம்ப்

Pagetamil

மண்டை மேலிருந்த கொண்டைக்குள் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள்!

Pagetamil

ரஷ்யாவும் அமெரிக்காவும் உறவை சீர் செய்ய நீண்டதூரம் செல்ல வேண்டும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!