மல்வத்து ஒயாவில் காணாமலான இளைஞன் – தேடுதல் நிறுத்தம்

Date:

13.01.2025 அன்று மன்னார் மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தேக்கம் அணைகட்டு பகுதியில் நீராட சென்ற மன்னார் காத்தாங்குளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதை அடுத்து, கிராம மக்கள் மற்றும் பொலிசாருடன் மன்னார் கடல் படையினரும் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அவரை கண்டுபிடிக்க முடியாமல், இரவு பகலாக தேடுதல் தொடர்ந்தும் எந்த வெற்றியும் இல்லை. இந்நிலையில், மல்வத்து ஒயா பெருக்கு எடுத்து அதிக நீர் வழிந்ததன் காரணமாக, தேடுதல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இவருடைய உடல் தண்ணீருடன் கடலுக்கு சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மல்வத்து ஓயா பெருக்கு எடுத்ததன் விளைவால் தற்காலிகமாக தேடுதல் நடைவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்