பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

Date:

மும்பை பந்த்ராவில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டில் இன்று (16.01.2025) அதிகாலை வீடு புகுந்து கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாலை 2.30 மணியளவில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டில் நுழைந்து, சயிப் அலிகானின் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

சத்தம் கேட்டு சயிப் அலிகான் அங்கு சென்றபோது, மர்ம நபர் கத்தியால் அவரை தாக்கி, பின்னர் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சயிப் அலிகான் உடனடியாக மும்பையின் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய மர்ம நபரை கண்டறிந்து பிடிக்க விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சயிப் அலிகானின் உடல்நிலை குறித்து தொடர்ந்து அக்கறை வெளிப்படுத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்