மதவாச்சியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு

Date:

நேற்று மாலை (09.01.2025) மதவாச்சி பொலிஸ் பிரிவில் கட்டுவெல மயானம் அருகிலுள்ள குழியில் 30-40 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மதவாச்சிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சடலத்தில் மேலாடை மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் இருந்ததோடு, அருகிலிருந்த பையில் கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ.சபை பேருந்தில் பயணித்த சிட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டதால், இது ஒரு கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை நீதவான் விசாரணைக்கு பிறகு பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மதவாச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் ஆண்களிடம் மட்டும் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை...

திருகோணமலையில் நேற்று அகற்றப்பட்ட சிலையை மீள வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்: கோட்டா காலத்தையை மிஞ்சும் அனுரவின் நடவடிக்கை!

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக நேற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக...

Fortune Favors the Bold A High-RTP Adventure Awaits on Chicken Road.

Fortune Favors the Bold: A High-RTP Adventure Awaits on...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்