தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Date:

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதில்லை என சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொலிசார் தமது அதிகாரத்தை மீறுவதாகவும், பஸ்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கருதுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பஸ் சங்கங்கள் ஆரம்பத்தில் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானித்திருந்தன.

இந்நிலையில், பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் சந்தித்தனர்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதில்லை என பஸ் சங்கங்கள் முடிவு செய்தன.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்