பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான சிகரெட்டுகளை மாணவர்கள் பாவிப்பது ஆபத்தானது என காலி தேசிய வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




